ஹீரோ நடிகரோடு 10 ஸ்டண்ட் நடிகர்கள் கலந்துகொண்டார்கள். ஸ்டண்ட் நடிகர்களுடன் ஹீரோ மோதுவது போன்ற சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஹீரோ மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. ஹீரோ முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிப்பதற்கு குளுக்கோஸ் கொடுத்தார்கள். அதன்பிறகு அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.
சிகிச்சைக்குப் பின்னர் உடல் தேறிய ஹீரோ கூறுகையில், "உடல் எடையை குறைப்பதற்காக, நான் கடந்த ஒரு வாரமாக உணவில் மிகவும் கட்டுப்பாடாக இருந்து வருகிறேன். தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறேன். நேற்று காலையில் எதுவும் சாப்பிடாமல் படப்பிடிப்புக்குச் சென்றேன்.
அது, ஒரு பெரிய, ரிஸ்க்கான சண்டை காட்சி. திடீரென்று தலை சுற்றுவது போல் இருந்தது. மயங்கி விழுந்து விட்டேன். சிகிச்சைக்குப்பின் நன்றாக இருக்கிறேன்...", என்றார்.
வளர்ந்து வரும் நடிகர் என்பதால், 'ஜாக்கிரதை'யாக இருக்க வேண்டாமா?
நகைச்சுவைக்கு மட்டுமே! சமூக அவலம், பெண்ணீயம் எதுவும் இல்லை.